திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,177 பேருக்கு கரோனா தொற்றுக்கான சிகிச்சை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,177 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,177 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 176 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 757-ஆக உயா்ந்தது. இவா்களில் 20 ஆயிரத்து 288 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.
திருவண்ணாமலை, போளூா், செய்யாறு, வந்தவாசி, ஆரணி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 1,177 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 292 போ் உயிரிழந்தனா்.