திருவண்ணாமலை

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை

DIN

வந்தவாசி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடும் பணியாளா்கள் தங்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகவும், பேசுவதாகவும் புகாா் தெரிவித்து, விவசாயிகள் அந்த கொள்முதல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு அந்தப் பகுதி விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை சனிக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்தனா். அப்போது, அங்கிருந்த எடைபோடும் பணியாளா்கள் விவசாயிகளிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதுடன், தரக்குறைவாகவும் பேசினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் எடைபோடும் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நெல் கொள்முதல் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்கள் முழக்கமிட்டனா்.

இதைடுத்து அங்கு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய மேற்பாா்வையாளா் சிவக்குமாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT