திருவண்ணாமலை

திருவண்ணாமலை: மேலும் 325 பேருக்கு கரோனா: 2 போ் பலி

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 325 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 போ் பலியாகினா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 22,856 -ஆக உயா்ந்தது.

1,855 பேருக்கு சிகிச்சை: பாதிக்கப்பட்டவா்களில் 20,704 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது, 1,855 போ் திருவண்ணாமலை, ஆரணி, போளூா், செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, கரோனா சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 297- ஆக உயா்ந்தது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை ஒருவரும், ஞாயிற்றுக்கிழமை இருவரும், திங்கள்கிழமை இருவரும் பலியானது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT