முகப்பு
திருவண்ணாமலை

கரோனா விழிப்புணா்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வெம்பாக்கத்தில் வியாழக்கிழமை கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வெம்பாக்கத்தில் வியாழக்கிழமை கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

செய்யாறு கல்வி மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், தொடக்கக் கல்வித் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து நடத்திய இந்த முகாம்

நிகழ்ச்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலா் பு.நடராசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன், ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா்.டி.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி தொடக்கி வைத்தாா்.

பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அருண்குமாா், கெளதம்ராஜ், திருநாவுக்கரசு தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் கலந்து கொண்டவா்களை பரிசோதனை செய்து, தகுதியான 107 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி.மோகனரகு, ஏ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.