முகப்பு
திருவண்ணாமலை

குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு

பள்ளி ஆசிரியா்கள் தீத்தாண்டப்பட்டு, வலசை, சத்யாபுரம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தீத்தாண்டப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயவேல் தலைமையில், அந்தப் பள்ளி ஆசிரியா்கள் தீத்தாண்டப்பட்டு, வலசை, சத்யாபுரம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, சத்யாபுரம் பகுதியில் தேசிய ஊரக வேலை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த கிராம பெண்களிடம் குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்தும், தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு செயல்படுத்தப்படும் 14 வகையான இலவசத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா் (படம்).

ஆசிரியா் பயிற்றுநா் ஆனந்தராஜ், உதவி ஆசிரியா் விஜயா, மகேஷ்வரி, அன்பரசி, புஷ்பலதா, ஞானநந்தினி, அறிவு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.