முகப்பு
திருவண்ணாமலை

மயங்கி விழுந்த மின்வாரிய ஊழியா் பலி

பணியின் போது மயங்கி விழுந்த மின்வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

பணியின் போது மயங்கி விழுந்த மின்வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ராந்தம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவா், பெருங்கட்டூா் மின் வாரியத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வந்தாா். செவ்வாய்க்கிழமை தண்டப்பந்தாங்கல் கூட்டுச்சாலை அருகே பணியில் ஈடுபட்டிருந்த போது, மயங்கி விழுந்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பிய தங்கராஜ், புதன்கிழமை வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் திடீரென உயிரிழந்தாா்.

இதுகுறித்து மோரணம் காவல் நிலையத்தில் தங்கராஜின் மகன் அஜய்குமாா் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் பாரி அன்னபாலன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.