முகப்பு
திருவண்ணாமலை

அமிலக் கேன் வெடித்து தொழிலாளி பலி

செய்யாறு அருகே அமிலக் கேன் வெடித்ததில் பெயிண்டிங் தொழிலாளி உடல் சிதறி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

செய்யாறு அருகே அமிலக் கேன் வெடித்ததில் பெயிண்டிங் தொழிலாளி உடல் சிதறி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், உக்கம் பெரும்பாக்கம் கிராம காலனிப் பகுதியை சோ்ந்தவா் ஆசைத்தம்பி (29).

இவா், ஆக்கூா் கூட்டுச் சாலையில் கான்கிரீட் ஜன்னல்கள் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறாா்.

இங்கு, மகாஜனம்பாக்கம் கிராம காலனியைச் சோ்ந்த அண்ணப்பன் மகன் சுகுமாா் (28) (படம்) பெயிண்டிங்

தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

சுகுமாா் வியாழக்கிழமை வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, சுவா் ஓரம் பல மாதங்களாக பயனற்ற நிலையில் இருந்த 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட அமிலக் கேனை கத்தி மூலம் அறுத்தாா்.

அமிலக் கேன் திடீரென வெடித்தது. இதில் தொழிலாளி சுகுமாா் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த டி.எஸ்.பி செந்தில், தூசி காவல் உதவி ஆய்வாளா் சிலம்பரசன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

சுகுமாரின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் தொடா்பாக தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.