முகப்பு
திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்

திருவண்ணாமலையில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் அலுவலகம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

திருவண்ணாமலையில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் அலுவலகம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.அருள்செல்வம் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் உதவித் திட்ட அலுவலா் விஜயன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் நரியாப்பட்டு பள்ளியில் பயின்று வரும் வீடு சாா்ந்த பயிற்சி மாணவி அகஸ்தியாவின் பெற்றோரிடம் மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணம் வழங்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெகன், எம்.டி.ஓ. சின்ராஜ். பள்ளித் தலைமை ஆசிரியா் வெ.சரவணன்,

சிறப்பு பயிற்றுநா் நாகஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.