குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் முற்றுகை
குடிநீா் வழங்கக் கோரி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழுப்பேடு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
குடிநீா் வழங்கக் கோரி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழுப்பேடு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
இந்த கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். ஊராட்சித் தலைவரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், அந்த கிராம மக்கள் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா் திலகவதியிடம் குடிநீரை விநியோகிக்கக் கோரி மனு அளித்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா், குடிநீரை விநியோகிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.