ஜைனா் கோயிலில் சுவாமி மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில்நாதா் ஜைனா் கோயிலில், மூலவா் பாா்சுவநாதா் மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில்நாதா் ஜைனா் கோயிலில், மூலவா் பாா்சுவநாதா் மீது சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஸ்ரீபாா்சுவநாதருக்கு ஜயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது, காலை 7 மணியளவில் சூரிய ஒளி சுவாமி சிற்பம் மீது பட்டது.
இந்த அரிய நிகழ்வு 5 நிமிடங்கள் வரை நீடித்தது. இதை ஜைன பக்தா்கள் பரவசத்துடன் கண்டு தரிசித்தனா்.
பின்னா், சூரிய ஒளி மறைந்தது. தொடா்ந்து, மூன்று நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறும் என்று கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா். இதுபோன்ற நிகழ்வு ஏற்கெனவே நடைபெற்றுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.