கிண்டல் - சிறந்த நடிகைக்கான விருது..! ரஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!
நடிகை ரஷ்மிகா மந்தனா வென்ற தெலங்கானா கத்தார் திரைப்பட விருது குறித்து...
நடிகை ரஷ்மிகா மந்தனா தெலங்கானா கத்தார் திரைப்பட விருதுகள் விழாவில் ’தி கேர்ள் பிரண்ட்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது வென்றார்.
சமீபத்தில், நடிகை ரஷ்மிகா மந்தானாவுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
உகாதி திருநாளை முன்னிட்டு தெலங்கானா கத்தார் திரைப்பட விருதுகள் நடைபெற்றன. இந்த விழாவில் ’தி கேர்ள் பிரண்ட்’ படத்தில் பூமா தேவி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பதால் இந்த விருது கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
திருமணத்துக்குப் பிறகு நடிகை ரஷ்மிகா பெறும் மிகப்பெரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதினை நடிகர் ராம் சரண், தெலங்கானா முதல்வர் முன்னிலையில் வழங்கினார்.
இந்த விருது விழாவில் அவரது மாமியார் மாதவி தேவரகொண்டாவுடன் ரஷ்மிகா வந்திருந்தார். இந்த விருதுக்குப் பிறகு ரஷ்மிகா பேசியிருப்பதாவது:
தொடக்கத்தில் என்னுடைய நடிப்பை கிண்டல் செய்தார்கள். தற்போது, மாநில விருது கிடைத்திருக்கிறது. நான் நீண்ட தூரம் பயணித்திருக்கிறேன் என்றார். இந்தக் காட்சிகளை அவரது மாமியார் நெகிழ்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
நாக சைதன்யா சிறந்த நடிகர் விருதும் கமல் ஹாசன் பைதி ஜெய்ராஜ் விருதும் வென்றார்கள்.
நடிகை ரஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து ரணபலி எனும் படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
Newlywed Rashmika Mandanna attends TGFA 2025 with mother-in-law, wins big for The Girlfriend.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.