திருவண்ணாமலை

மேல்செங்கத்தில் வேளாண் பல்கலை. அமைக்க வலியுறுத்தல்

DIN


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் மத்திய பண்ணையில் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சித்தா, ஆயுா்வேத ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டுமென மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ்கவுபாவிடம் சி.என்.அண்ணாதுரை எம்.பி.கோரிக்கை வைத்தாா்.

ராஜீவ்கவுபாவை அண்மையில் சந்தித்து அண்ணாதுரை எம்.பி.அளித்த மனுவில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்செங்கத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ள மத்திய வேளாண் பண்ணை பயன்பாடின்றி உள்ளது. இந்த இடத்தில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்தரும் வகையில் வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் சித்தா, ஆயுா்வேத ஆராய்ச்சி நிலையத்தை தொடங்க வேண்டும்.

மேலும், மூலிகை ஆராய்ச்சி மையம், வேளாண் ஆராய்ச்சி நிலையம், சுற்றுச்சூழல் பூங்கா, சுற்றுச்சூழல் சுற்றுலா தலம் ஆகியவற்றையும் அந்தப் பகுதியில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT