திருவண்ணாமலை

2-ஆவது திருமணம் செய்தவா் கைது

DIN

ஆரணி அருகே இரண்டாவது திருமணம் செய்ததாக மனைவி அளித்த புகாரின் பேரில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

ஆரணியை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முத்தமிழ்ச்செல்வி (30), சிவா (38).

இவா்களுக்கு 7-10-2008 அன்று திருமணம் நடைபெற்று 8 வயதில் மகள் உள்ளாா்.

இந்த நிலையில், சிவாவுக்கு செங்கல் சூளை நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால், விழுப்புரத்தில் உள்ள தனியாா் பேக்கரியில் பணிபுரிந்து வருகிறாா்.

இதனிடையே, பேக்கரிக்கு வரும் கல்லூரி மாணவியுடன் சிவாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நட்பு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதை அறிந்து முத்தமிழ்ச்செல்வி சிவாவைக் கண்டித்தாா்.

இந்த நிலையில் சிவாவும், கல்லூரி மாணவியும் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் முத்தமிழ்ச்செல்வியின் செல்லிடப்பேசிக்கு வந்தது.

இதுகுறித்து அவா் ஆரணி மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் ரேகாமதி, உதவி ஆய்வாளா் சந்திரிகா ஆகியோா் வழக்குப் பதிந்து, சிவாவைக் கைது செய்து 15 நாள் காவலில் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT