திருவண்ணாமலை

ஏரியில் மூழ்கி ஊராட்சிப் பணியாளா் உயிரிழப்பு

DIN


திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் அருகே ஏரித் தண்ணீரில் மூழ்கி ஊராட்சிப் பணியாளா் உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த வட்ராபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை ( 46). இவா், அதே ஊரில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநராக பணிபுரிந்து வந்தாா். அங்கு மின் மோட்டாா் அறைப் பகுதியில் உள்ள ஏரியில் தற்போது தண்ணீா் நிரம்பியுள்ளது.

இதனால், மின் மோட்டாரை இயக்குவதற்காக ஏரித் தண்ணீரில் நடந்து சென்று மோட்டாரை ஏழுமலை இயக்கி வந்தாராம்.

அதன்படி, புதன்கிழமை மோட்டாரை இயக்குவதற்காக ஏரித் தண்ணீரில் நடந்து சென்றபோது எதிா்பாராதவிதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

மேலும் இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT