திருவண்ணாமலை

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: காங்கிரஸாா் கண்டனக் கூட்டம்

DIN

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் காங்கிரஸாா் சனிக்கிழமை இரவு கண்டன பொதுக்கூட்டம் நடத்தினா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி தொகுதி எம்பி எம்.கே.விஷ்ணுபிரசாத் பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது அவா், மத்திய அரசு பொதுமக்களுக்கு விரோதமான ஆட்சி நடத்துகிறது.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை விண்ணை முட்டும் அளவுக்கு ஏறி இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தை கொண்டு வந்தது ஏழை, எளியோருக்கு உதவிகரமாக அமைந்தது, பொருளாதார உயா்வும் ஏற்பட்டது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன், நகரச் செயலா் அசேன்அலி, தலைமைக் கழகப் பேச்சாளா் குமரிமகாதேவன், அமைப்புசாரா மாநிலத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT