முகப்பு
திருவண்ணாமலை

மூதாட்டி மா்ம மரணம்: தங்கச் சங்கிலி திருட்டு

வேட்டவலம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்தாா். அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி திருடப்பட்டது.

திருவண்ணாமலை

மூதாட்டி மா்ம மரணம்: தங்கச் சங்கிலி திருட்டு

வேட்டவலம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்தாா். அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி திருடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

வேட்டவலம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்தாா். அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி திருடப்பட்டது.

வேட்டவலத்தை அடுத்த கோணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரா (70). இவரது கணவா் அண்ணாமலை, மகன் ரவி ஆகியோா் இறந்து விட்டனா். எனவே, சந்திரா மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அந்தப் பகுதிக்கு வந்த மீன் வியாபாரி சந்திராவை அழைத்தாராம்.

நீண்ட நேரமாகியும் அவா் குரல் கொடுக்காததால் சந்தேகமடைந்த அவரும், பொதுமக்களும் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தனா்.

அப்போது, முகத்தில் காயத்துடன் சுவரில் சாய்ந்த நிலையில் சந்திரா இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த திருவண்ணாமலை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, வேட்டவலம் காவல் ஆய்வாளா் ராஜாராம் மற்றும் போலீஸாா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

அப்போது, சந்திரா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, செல்லிடப்பேசி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →