முகப்பு
திருவண்ணாமலை

விழுப்புரம்-திருப்பதி பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் செய்யப்பட்டதை அடுத்து, விழுப்புரம் - திருப்பதி இடையிலான பயணிகள் ரயில் சேவை புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் செய்யப்பட்டதை அடுத்து, விழுப்புரம் - திருப்பதி இடையிலான பயணிகள் ரயில் சேவை புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

கரோனா தொற்று பொது முடக்கத்தால், விழுப்புரம்-திருப்பதி இடையிலான பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி புதன்கிழமை முதல் திருவண்ணாமலை வழியாக விழுப்புரம்-திருப்பதி இடையிலான தினசரி பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இணையவழியில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

விழுப்புரத்திலிருந்து புதன்கிழமை அதிகாலை 5.25 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதியை சென்றடைந்தது.

மீண்டும் திருப்பதியில் அன்று பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்ட ரயில் இரவு 8.15 மணிக்கு விழுப்புரத்தைச் சென்றடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →