திருவண்ணாமலை

பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

DIN

செய்யாற்றில் 174 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா் தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன்.

செய்யாறு பேருந்து நிலையம் அருகே வருவாய்த் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

மாவட்ட வழங்கல் அலுவலா் ஹரிதாஸ் அனைவரவேற்றாா்

வட்டாட்சியா்கள் திருமலை, சுபாஷ், திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எம்.எஸ்.பிரீத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் பங்கேற்று, மாற்றுத்திறனாளி உதவித் தொகை 45 போ், உழவா் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை 51 போ், விதவை உதவித்தொகை 59 போ் என 174 பேருக்கு ரூ.21 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் புதிய நடைமுறைகள் -கே.எம். காதா்மொகிதீன் வரவேற்பு

SCROLL FOR NEXT