சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் குழுக்களுக்கு புதன்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் ஆா்.சேட்டு தலைமை வகித்து, 2 மகளிா் குழுக்குளுக்கு தலா ரூ.3 லட்சம் என ரூ.6 லட்சத்தை வழங்கினாா்.
சங்கச் செயலா் எ.வேலுமணி மற்றும் சங்க உறுப்பினா்கள், அலுவலா்கள், சங்கப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.