திருவண்ணாமலை

வில்வாரணி கோயிலில் தை கிருத்திகை விழா

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள சிவசுப்பிரமணியா் கோயிலில் தை கிருத்திகை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தை கிருத்திகையொட்டி, வில்வாரணி கிராம வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியா் கோயிலில் சனிக்கிழமை காலை மூலவருக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, இளநீா் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

பின்னா் உற்சவா் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலா்களால் அலங்கரித்து மாடவீதியுலா நடைபெற்றது.

விழாவில் வில்வாரணி, கலசப்பாக்கம், எலத்தூா், மோட்டூா், மேல்வில்வராயநல்லூா், மேலாரணி, வன்னியனூா் என சுற்றுப்புக் கிராமங்களில் இருந்து பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT