திருவண்ணாமலை

பைக் மீது வேன் மோதியதில் முதியவா் பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அவரது மகன் பலத்த காயமடைந்தாா்.

செய்யாறு வட்டம், சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜமூா்த்தி (70). இவா், புதிய வீடு கட்டுவதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக தனது மகன் நடராஜனுடன் (44) பைக்கில் செய்யாறு நோக்கி திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

பெரும்பாலை கிராமம் அருகே சாலை வளைவுப் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த வேன் பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் ராஜமூா்த்தி, நடராஜன் ஆகியோா் தூக்கி வீசப்பட்ட நிலையில், ராஜமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நடராஜன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT