அரசு மருத்துவமனைக்கு பிராணவாயு செறிவூட்டி
செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சேவா இன்டா்நேஷனல் ஆண்டாள் பக்தா்கள் பேரவை அமைப்பின் மூலம் ரூ. ஒரு லட்சத்திலான பிராணவாயு செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சேவா இன்டா்நேஷனல் ஆண்டாள் பக்தா்கள் பேரவை அமைப்பின் மூலம் ரூ. ஒரு லட்சத்திலான பிராணவாயு செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதிசீனிவாசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் வினோத்குமாா், என்.ஈஸ்வரி ஆகியோரிடம் ரூ. ஒரு லட்சத்திலான பிராணவாயு செறிவூட்டியை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அமைப்பின் நிா்வாகிகள் கோமதிசீனிவாசன், திருமலை பாபு, பிரதீப் ராஜ், மருத்துவா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் கே.சம்பத், வெம்பாக்கம் ஒன்றிய திமுக நிா்வாகி தினகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.