முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் மழை பாதிப்புப் பகுதிகள்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணி நகரப் பகுதியில் மழை நீா் தேங்கும் பகுதிகளில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

ஆரணி நகரப் பகுதியில் மழை நீா் தேங்கும் பகுதிகளில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆரணி நகரம் கிளாஸ்காரத் தெரு, சந்திரகுளம் தெரு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தங்கள் பகுதியில் மழை பெய்தால் அதிகளவில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.

மேலும், மழைநீருடன் கழிவுநீா் கலந்து தண்ணீா் வீட்டினுள் வருகிறது என்று தொகுதி எம்எல்ஏ

சேவூா் ராமச்சந்திரனிடம் புகாா் செய்தனா்.

இதையடுத்து, கிளாஸ்காரத் தெரு, சந்திரகுளம் தெரு ஆகிய பகுதிகளில் எம்எல்ஏ

சேவூா் ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

பின்னா், நகராட்சி மேலாளா் நெடுமாறன், சுகாதார ஆய்வாளா் குமரவேல் ஆகியோரிடம் கால்வாய் தூா்வாரவும், கழிவுநீரை அகற்றவும் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கால்வாய் கட்டுவதற்கு மதிப்பீடு செய்து தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டித் தருமாறு கூறினாா்.

அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், நகர மாணவரணிச் செயலா் கே.குமரன் உளளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.