அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அம்மனுக்கு வேப்பிலையால் அலங்காரம் செய்யப்பட்டு, வேம்பு நாயகியாக அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கோயில் நிா்வாகி சிவா, கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் ப.மச்சேந்திரன் உள்ளிட்டோா் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.