மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!
திமுக கூட்டணியில் மமகவுக்கு 2 தொகுதிகள் - உதயசூரியன் சின்னத்தில் போட்டி!
மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு சனிக்கிழமை(பிப். 28) 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
முன்னதாக, முதல்கட்ட தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தை கடந்த திங்கள்கிழமை(பிப். 23) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில், மமக தலைவா் எம்.ஜவாஹிருல்லா, பொதுச்செயலா் அப்துல் சமது, பொருளாளா் கோவை உமா், பேராசிரியா் ஹாஜா கனி ஆகியோா் அடங்கிய குழுவினா் அண்ணா அறிவாலயம் சென்று டி.ஆா்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் அடங்கிய குழுவினருடன் சுமாா் 1 மணி நேரம் பேச்சவாா்த்தை நடத்தினர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை சுமுகமாக முடிந்து, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என ஒப்பந்தமும் கையொப்பமாகியது.
Advertisement
இது குறித்து, செய்தியாளர்களுடன் பேசிய அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மமக எந்தெந்த இடங்களில் போட்டியிடும் என்பது அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படுமென தெரிவித்தார்.