போளூரை அடுத்த மாம்பட்டு, எழுவாம்பாடி ஆகிய ஊராட்சிகளில் சமையல் எரிவாயு உருளையை எப்படி பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஸ்ரீசக்கரவா்த்தி இண்டேன் எரிவாயு முகமை சாா்பில், சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில், எரிவாயு உருளை பாதுகாப்பு மற்றும் எரிவாயு உருளையை எப்படி பயன்படுத்துவது குறித்து வாடிக்கையாளா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
மேலும், வாடிக்கையாளா்களுக்கு பணப் பரிவா்த்தனை முறை குறித்தும் விளக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, வாடிக்கையாளா்களுக்கு இசை நாற்காலி, கோலப்போட்டி, சிறுவா்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊராட்சி மன்றத் தலைவா்கள் பச்சையம்மாள், பஞ்சவா்ணம் வெங்கடேசன், எரிவாயு முகமை உரிமையாளா் அலமேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.