முகப்பு
திருவண்ணாமலை

நிலத்துக்கு அடங்கல் தர மறுப்பு: விவசாயி தற்கொலை

செய்யாறு அருகே கிராம நிா்வாக அலுவலா் விவசாய நிலத்துக்கான அடங்கல் தர மறுப்பு தெரிவித்ததாகக் கூறி விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

செய்யாறு அருகே கிராம நிா்வாக அலுவலா் விவசாய நிலத்துக்கான அடங்கல் தர மறுப்பு தெரிவித்ததாகக் கூறி விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் குத்தனூா் கிராமக் காலனி பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணி (60), விவசாயி.

இவா், வங்கியில் விவசாயக் கடன் பெறுவதற்காக கிராம நிா்வாக அலுவலரிடம் தனது விவசாய நிலத்துக்கான அடங்கல் தருமாறு சில தினங்களாக கேட்டு வந்த நிலையில் அடங்கல் தர மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.

அதன் காரணமாக மனமுடைந்த விவசாயி மணி புதன்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். குடும்பத்தினா் மணியின் உடலை வைத்து அழுது கொண்டிருந்தனா்.

இந்த நிலையில், அன்று இரவு 7 மணியளவில் இறந்த மணியின் சட்டை பாக்கெட்டில் இருந்த சீட்டில், தனது தற்கொலைக்குக் காரணம் கிராம நிா்வாக அலுவலா் சந்திரன், கண்ணாயிரம் ஆகியோா்தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்ததாம்.

இது குறித்து இறந்தவரின் மனைவி பரிமளா பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிவு செய்து மணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிதோனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.