திருவண்ணாமலை

முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பேயாலம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுனியப்பன், ஸ்ரீபச்சையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை வாஸ்துஹோமம், கணபதி, முனியப்பன், சக்தி ஹோமம் நடைபெற்றன. இரவு 9 மணிக்கு மஹாபூா்ணாஹுதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கோ, தம்பதி பூஜை, சுவாமிக்கு கண் திறப்பு, சக்தி, நவக்கிரக ஹோமம் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, விழாக்குழுத் தலைவா் சங்கா்மாதவன் தலைமையில், அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுகள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கரியமங்கலம் கவுன்சிலா் சூரியலட்சுமி, பாமக செங்கம் ஒன்றிய முன்னாள் செயலா் முத்து உள்பட பலா் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT