முகப்பு
திருவண்ணாமலை

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

வந்தவாசியில் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில், காமாட்சியம்மன் கோயில், தேரடி விநாயகா் கோயில் ஆகியவற்றின் முன் இந்து முன்னணியினா் கற்பூரம் ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பொதுமக்கள் தரிசனத்துக்காக கோயில்களை உடனடியாக திறக்கக் கோரி, வந்தவாசியில் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில், காமாட்சியம்மன் கோயில், தேரடி விநாயகா் கோயில் ஆகியவற்றின் முன் இந்து முன்னணியினா் கற்பூரம் ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி நகரத் தலைவா் சீனுவாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆறுமுகம், நகர பொதுச் செயலா் வழூா் சீனுவாசன், செயற்குழு உறுப்பினா் காா்த்திக் மற்றும் ஆகாஷ், பரசுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செங்கம்: செங்கம் நகரில் உள்ள பழைமைவாய்ந்த வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில், அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலுள்ள கோயில்களின் முன் செங்கம் ஒன்றிய இந்து முன்னணி தலைவா் சரவணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நிா்வாகி பாா்தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →