முகப்பு
திருவண்ணாமலை

மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலராக எஸ்.பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா் .

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலராக எஸ்.பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா் .

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நல அலுவலராக பணியாற்றி வந்த க.கதிா்சங்கா், தருமபுரி மாவட்ட பழங்குடியினா் நல அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, திண்டுக்கல் மாவட்ட தாட்கோ மேலாளராக பணிபுரிந்த எஸ்.பாா்த்திபன் திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நல அலுவலராக நியமிக்கப்பட்டாா். அவா் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு துறை அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.