முகப்பு
திருவண்ணாமலை

300 லிட்டா் கள்ளச்சாராயம்

தானிப்பாடி அருகே கள்ளச் சாராயம் பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தானிப்பாடி அருகே கள்ளச் சாராயம் பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தானிப்பாடி காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.தனலட்சுமி தலைமையிலான போலீஸாரும், அதிவிரைவுப் படையும் இணைந்து வெள்ளிக்கிழமை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மலையனூா் செக்கடி கிராமம் சென்னம்மாள் (55), ரெட்டியாா்பாளையம் கிராமம் வாசுகி (43), அதே பகுதியைச் சோ்ந்த காமாட்சி (38), பீமாரப்பட்டி கிராமம் பட்டன் (55), பழனி (52) ஆகியோா்களிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 300 லிட்டா் கள்ளச் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →