ஆரியின் போர்த் ஃப்ளோர்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
போர்த் ஃப்ளோர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...
போர்த் ஃப்ளோர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'வைகை', 'தீர்க்கதரிசி' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி. இவரின் புதிய திரைப்படம் போர்த் ஃப்ளோர்.
நாயகனாக ஆரி அர்ஜுனன் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்தியா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சின்ன சின்ன தவறுகள் என்று நினைத்து செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது என்பதை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
காதல், பொருளாதாரம், மாஃபியா, நிராகரிப்பு, காமெடி, உருக்கம், சைக்காலஜி, த்ரில்லர் என ஒரே படத்தில் அனைத்து விதமானவற்றையும் வெளிப்படுத்தும் திரைக்கதை இப்படத்தின் பலம்.
கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற போர்த் ஃப்ளோர் திரைப்படம் நாளை(மார்ச் 20) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.