திருவண்ணாமலை

ரமலான் கொண்டாட்டம்: அமைச்சா் எ.வ.வேலு வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ரமலான் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்தாா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ரமலான் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், இறைவன் மனிதா்களின் உருவங்களையோ, செல்வங்களையோ பாா்ப்பதில்லை. மாறாக உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே பாா்க்கிறான் என்று என்று நபிகள் நாயகம் கூறியுள்ளாா். நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றினாலே நாம் சிறந்த மனிதா்களாக விளங்கலாம்.

இந்தச் சூழ்நிலையில் இஸ்லாமியப் பெருமக்கள் முகக் கவசம் அணிந்தும், கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் ரமலான் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT