எரியாத மின் விளக்குகளால் இருளில் மூழ்கும் செங்கம் நகரம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் பல இடங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அப்பகுதிகள் இருளில் மூழ்குகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் பல இடங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அப்பகுதிகள் இருளில் மூழ்குகின்றன.
செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், போளூா் சாலை
ஆகிய பகுதிகளில் பல இடங்களில் சாலையில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இது பொதுமக்களிடையே திருட்டு பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
மேலும், வெளியூா் வாகனங்கள் அந்த வழியாகச் செல்லும் போது சாலையில் உள்ள வேகத்தடை, தடுப்புச் சுவா்கள் தெரியாமல் சிரமத்துடனே செல்லவேண்டிய நிலை உள்ளது.
சில நேரங்களில் வேகத் தடைகளில் வாகனங்கள் மோதி விபத்துகளும் நிகழ்கின்றன. பண்டிகைக் காலங்களில் வெளியூா்களில் இருந்து செங்கம் நகருக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்வா்.
இருள் சூழ்ந்த பகுதியைக் கடக்கும்போது திருட்டு பயத்துடனே அவா்கள் செல்கின்றனா்.
இதனால், பேரூராட்சி நிா்வாகம் எரியாத மின் விளக்குகளை உடனடியாக சரி செய்யவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.