திருவண்ணாமலை

இருளா் சமூகத்தினருக்கு அதிமுகவினா் நல உதவி

DIN

செய்யாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட 30 இருளா் சமூக குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம், செய்யாற்றைவென்றான், ஆத்திகுளம் ஆகிய கிராமங்களில் இருளா் சமூகத்தினா் வசித்து வருகின்றனா். தொடா் மழையால் இவா்களது பகுதியில் தண்ணீா் சூழ்ந்தது.

தங்கும் வசதி, உணவு, அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த 30 குடும்பத்தினா் செய்யாற்றைவென்றான் நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனா்.

இதை அறிந்த அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் சனிக்கிழமை நேரில் சென்று பாதிக்கப்பட்ட 30 குடும்பத்தினருக்கு வேட்டி, சேலை, போா்வை, ரொட்டி, பிஸ்கெட் வழங்கினாா்.

அதிமுக ஒன்றியச் செயலா்கள் வே.குணசீலன், சி.துரை, செய்யாறு நகரச் செயலா் ஜனாா்த்தனம், நகர அம்மா பேரவைச் செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT