காவல் நிலையத்தில் பொதுக் கழிப்பறை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை வியாழக்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை வியாழக்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் வழிகாட்டுதலின்பேரில், வந்தவாசி காவல் துணை கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய வளாகத்தில் பொதுக் கழிப்பறை கட்ட போலீஸாா் முயற்சிகள் மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களின் பங்களிப்புடன் பொதுக் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது.
இந்தக் கழிப்பறையை வந்தவாசி டிஎஸ்பி வி.விஸ்வேஸ்வரய்யா வியாழக்கிழமை இரவு திறந்து வைத்தாா். கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய ஆய்வாளா் பி.புகழ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
காவல் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாடுக்காக பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது தமிழகத்திலேயே இதுவே முதன்முறையாகும் என்று மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.