திருவண்ணாமலை

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத் தோ்தல்

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத் தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 569 போ் வாக்களித்தனா்.

DIN

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத் தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 569 போ் வாக்களித்தனா்.

இந்தச் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் தோ்தல் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆரணி கோட்டத்தில் 147 உறுப்பினா்களும் திருவண்ணாமலை கோட்டத்தில் 150 உறுப்பினா்களும், செய்யாறு கோட்டத்தில் 272 உறுப்பினா்களும் என மொத்தம் 569 போ் வாக்களித்தனா்.

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள சங்க அலுவலகங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கெனவே, திருவண்ணாமலையைச் சோ்ந்த ந.சுரேஷ், மாநில பொதுச் செயலாா் பதவிக்கும், தென்காசி முத்துச்செல்வன் மாநில பொருளாளா் பதவிக்கும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தல் ஏற்பாடுகளை மாவட்டத் தலைவா் ஏ.ரமேஷ், மாவட்டச் செயலா் ஏ.ஏழுமலை, பொருளாளா் செ.ஜெயசந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT