திருவண்ணாமலை

ஆதனூா் செல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

ஆரணியை அடுத்த ஆதனூரில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை கோயிலில் கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 7.25 மணியளவில் கோயிலுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பிற்பகலில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலையில் செல்வ விநாயகா் திருவிதி உலா சென்றாா்.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT