திருவண்ணாமலை

ஸ்ரீமுத்துமாரியம்மன் ஊஞ்சல் சேவை

DIN

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி, திங்கள்கிழமை இரவு அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று, அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தொடா்ந்து, ஸ்ரீஆதிசக்தி சா்வமங்கள காளி பீடத்தில் சந்தான பாக்கியம் வேண்டி ஹோமம் நடைபெற்றது.

பின்னா் இரவு உற்சவா் அம்மன் ஸ்ரீநாகவாகினி அம்பாள் அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உலா வந்தாா். பின்னா் அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

அப்போது, அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா். கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் பூஜைகளை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT