திருவண்ணாமலை

தண்டராம்பட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கணினி பயிற்சி

DIN

தண்டராம்பட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கணினி, தையல் பயிற்சி மையங்களை செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம் சாா்பில் செயல்படும் இந்த மையத்தின் திறப்பு விழாவுக்கு, தொண்டு நிறுவன இயக்குநா் இராம.பெருமாள் தலைமை வகித்தாா். மேலாளா் நோயல் அந்தோணிதாஸ் வரவேற்றாா்.

தண்டராம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் முத்துலட்சுமி, சமூக நலத்துறை அலுவலா் வேலு முன்னிலை வகித்தனா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கணினி, தையல் பயிற்சி மையங்களை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் சினம் தொண்டு நிறுவனப் பணியாளா்கள் ஆனந்தன், அசோக்குமாா், கணினி பயிற்சி ஆசிரியா் நீலாவதி, தையல் பயிற்சி ஆசிரியா் கீதாவேலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT