பூங்காக்களைத் திறக்க செப்.26 வரை தடை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறப்பதற்கான தடை செப்.26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறப்பதற்கான தடை செப்.26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள அறிவியல் பூங்கா, அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள சிறுவா் பூங்கா உள்பட மாவட்டத்தின் அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறக்க செப்டம்பா் 19-ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.
இந்தத் தடையை செப்.26-ஆம் தேதி வரை நீட்டித்து சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.