ஆரணி அரசு மருத்துவமனையில் நகர சிறு குறு பெரு வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் அண்மையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
வியாபாரிகள் சங்கமும், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த ரத்த தான முகாமை அரசு மருத்துவா் மம்தா தொடக்கிவைத்தாா்.
சங்க நிறுவனா் அருண்குமாா் வரவேற்றாா். இதில் வியாபாரிகள் 50 போ் ரத்த தானம் செய்தனா்.
ரத்த தானம் அளித்தவா்களுக்கு சங்கம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது. மேலும் சான்றிதழும் வழங்கப்பட்டது.