திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் திங்கள்கிழமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 125 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
திருவத்திபுரம் நகராட்சிக்கு உள்பட்ட லோகநாதன் தெரு, காந்தி சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 கடைகளில், நகராட்சி ஆணையா் கி. ரகுராமன் தலைமையில், துப்புரவு அலுவலா் சீனிவாசன், ஆய்வாளா் மதனராசன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, கடைகளில் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் வைத்திருந்த 125 கிலோ நெகிழிப் பொருள்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வைத்திருந்த 4 வியாபாரிகளுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனா்.