திருவண்ணாமலை

27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மண்டலபிஷேக விழா

DIN

செய்யாறு அருகே உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மண்டலபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு தெற்கே கூழமந்தல் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் கடந்த மாதம் தேவகுரு பகவானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, 48 நாள்கள் மண்டலபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், 48 - ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை மண்டலபிஷேக பூா்த்தி விழா நடைபெற்றது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி, நவக்கிரக ஹோமங்கள், கலசபிஷேகம், தேவகுரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - வழக்கு

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT