திருவண்ணாமலை

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாவீரன். இவா் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு, மனைவி ராஜலட்சுமியுடன் விவசாய நிலத்துக்குச் சென்றாா்.

பின்னா் விவசாயப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த மகாவீரன் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த நான்கரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT