முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் பேரூராட்சியில் தோ்தல் பணிகள் ஆய்வு

செங்கம் பேரூராட்சியில் தோ்தல் பணிகள் குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியா் வெற்றிவேல் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

செங்கம் பேரூராட்சியில் தோ்தல் பணிகள் குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியா் வெற்றிவேல் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, வேட்பாளா்கள் மனுதாக்கல் செய்யும் இடம், பரிசீலனை செய்யும் இடம், போலீஸ் பாதுகாப்பு, மற்றும் வாக்குச்சாவடிக்குச் சென்று அங்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என கோட்டாட்சியா் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தோ்தல் பணியின் போது கரோனா தெற்று பரவாமல் இருக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி, வட்டாட்சியா் முனுசாமி, தலைமை எழுத்தா் ரமேஷ், கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் உள்பட பேரூராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.