திருவண்ணாமலை

மரத்தில் பைக் மோதியதில் கட்டட மேஸ்திரி பலி

DIN

வந்தவாசி அருகே சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கட்டட மேஸ்திரி பலியானாா். 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த போந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகன்(40). கட்டட மேஸ்திரியான இவா் சென்னையில் வேலை செய்து வந்தாா்.   

இந்த நிலையில், இவா் சென்னையிலிருந்து சனிக்கிழமை பைக்கில் தனது சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.

வந்தவாசி - உத்திரமேரூா் சாலை, விளாங்காடு கிராமம் அருகே வந்தபோது சாலையோர புளிய மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதே இடத்திலேயே ஜெகன் உயிரிழந்தாா்.  

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா்  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT