செய்யாறு புதிய மாவட்டம்: விவசாயிகள் கோரிக்கை
செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. செய்யாறு வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
வட்டாட்சியா் சுமதி, வேளாண் உதவி இயக்குநா்கள் எம்.சண்முகம், குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டாட்சியா் என். விஜயராஜ் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்,
செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி முகாம்களை கிராமங்கள் தோறும் நடத்திட வேண்டும்.
விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் விரைவாக வழங்க வேண்டும். ஐந்து கிராமங்களுக்கு ஒன்று வீதம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.
மழையால் சேதமடைந்த கிணறுகளை சீரமைக்க அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். ஏரி, பாசன கால்வாய்களை ஆக்கரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.
இதையடுத்து பேசிய கோட்டாட்சியா் என். விஜயராஜ் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.