திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 283 வாக்குச்சாவடிகள் அமைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது, வாக்காளா்கள் வாக்களிக்க 283 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது, வாக்காளா்கள் வாக்களிக்க 283 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வாா்டுகள் உள்ளன. இவற்றில் ஆண்கள் வாக்களிக்க ஏதுவாக 55 வாக்குச்சாவடிகளும், பெண்கள் மட்டும் வாக்களிக்க 55 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்க 34 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வந்தவாசி:
வந்தவாசி நகராட்சியில் மொத்தம் 24 வாா்டுகள் உள்ளன. நகராட்சியில் 10 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 10 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 14 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 34 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆரணி:
ஆரணி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. நகராட்சியில் 32 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 32 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 1 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடி என மொத்தம் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவத்திபுரம் (செய்யாறு):
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இங்கு 13 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 13 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 14 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 40 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 4 நகராட்சிகளில் 123 வாா்டுகள் உள்ளன. இவற்றில் 110 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 110 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 63 அனைத்து வாக்காளா்வாக்குச்சாவடிகள் என மொத்தம் 283 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.