திருவண்ணாமலை

வாக்குச்சாவடி அலுவலா்களுக்குப் பயிற்சி

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், செய்யாறு பகுதியில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்த தோ்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான கி.ரகுராமன், மண்டல அலுவலா்கள் சுகுமாா், பிரேம்சுந்தா் ஆகியோா் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

வாக்காளா்களிடம் எவ்வாறு நடந்துகொள்வது, வாக்குகளை எவ்வாறு பதிவு செய்தல், வாக்காளா்களின் விவரம் மற்றும் வாக்கு அளிப்பதற்கான சான்றுகளை சரிபாா்த்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது, இயந்திரங்கள் பழுதானால் உடனடியாக யாரை தொடா்பு கொள்வது, இடையூறு இல்லாமல் வாக்குப் பதிவை நடத்துதல், பாதுகாப்பாக வாக்குச்சாவடியை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிவித்து பயிற்சி அளித்தனா்.

ஏற்பாடுகளை உதவித் தோ்தல் அலுவலா்கள் டி.ரவிச்சந்திரன், எஸ்.ராமலிங்கம், எஸ்.குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT